சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். முழுக்க முழுக்க விஜயகாந்துக்கு எதிராக அவரது பேச்சுக்கள் இருந்தன. குடித்து விட்டு பிரசாரம் செய்கிறார். இவர் எப்படி நல்ல தலைவராக முடியும் என்று வடிவேலு கேள்வி எழுப்பினார். ஆனால் அவரது தேர்தல் பிரசாரம் எடுபடாமல் போனது.
அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தேர்தல் முடிவை தொடர்ந்து விருகம்பாக்கத்தில் உள்ள வடிவேலு வீட்டை தே.மு.தி.க.வினர் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விஜயகாந்த் கட்சியினர் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து மிரட்டி வருவதாக வடிவேலு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-
நான் ஏன் நாட்டை விட்டு ஓட வேண்டும். மதுரையில் எனது தாய் வீட்டில் இருக்கிறேன். மக்களின் முடிவை ஏற்று கொள்ள வேண்டும். தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். விஜயகாந்தை வைத்து அ.தி.மு.க. வெற்றிப் பெறவில்லை. அ.தி.மு.க.வின் தயவால்தான் தே.மு.தி.க. வெற்றி பெற்றுள்ளது.
விஜயகாந்தால் என்றைக்கும் முதல்-அமைச்சராக முடியாது. தே.மு.தி.க. தொண்டர்கள் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்கள். அவர்கள் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள எனது வீட்டை தாக்கியுள்ளனர். விஜயகாந்துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன். விஜயகாந்த் தன்னை வருங்கால முதல்- அமைச்சர். கருப்பு எம்.ஜி.ஆர். என தொடர்ந்து கூறினால் அதற்கு எதிராகவே நான் பேசுவேன்.
திரைப்பட வாய்ப்புகள் குறைவது பற்றி நான் கவலைப்படவில்லை. என்னால் என் வாழ்க்கையை சமாளித்துக் கொள்ள முடியும். மாற்றத்தை விரும்பியே தமிழக மக்கள் அம்மாவுக்கு வாக்களித்துள்ளனர். விஜயகாந்திற்கும் இந்த வெற்றிக்கும் துளியும் சம்பந்தமில்லை. இது அம்மாவின் வெற்றியே.
இவ்வாறு அவர் கூறினார்.
1 கருத்துகள்:
mavan ni uthai vanga pora
கருத்துரையிடுக