ஏங்க.. நாளைக்குத்தான் நம்ம கல்யாண நாள். எப்படிக் கொண்டாடலாம்? ரெண்டு நிமிஷம் மவுன அஞ்சலி செலுத்துவோம்! | ||||
வயதானவர்-(கல்யாண தரகரிடம்) நல்ல பெண்ணாயிருந்தா சொல்லுங்க.. தரகர்-யாருக்கு வயதானவர்-எனக்குத்தான்..அடுத்த மாசத்தோட எனக்கு அறுபது வயசாகிறது.அப்போ ஒரு கல்யாணம் பண்ணிகலாமாமே... | ||||
எனக்கு அடுத்த வாரம் கல்யாணம்.. சின்ன பார்ட்டி கூட உண்டு.. சில நெருக்கமானவர்களுக்குத்தான் அழைப்பே.. பரிசுப்பொருள் கொண்டுவர வேண்டாம்.. ஜஸ்ட்..ஒரு அழகான பொண்ணு கூட்டி வந்தா போதும். என்னை கல்யாணம் பண்ண | ||||
கல்யாண மண்டபத்தில் சார், செருப்பை எங்க போடனும்...? என்ன முட்டாள்தனமான கேள்வி. கால்ல தான் போடனும்! | ||||
இந்த காலத்துல பத்து ரூபாய்க்கு மதிப்பே இல்லாம போச்சு ஆமா சரியா சொன்னீங்க... தெரிஞ்சும் ஏன் என் கல்யாணத்துக்கு பத்து ரூபாய் மொய் வெச்சீங்க...! | ||||
அவன் கஞ்சன்னு எப்படி சொல்ற.. அவன் பொண்ணு கல்யாணத்திலே..மூகூர்த்தத்தில..ஆசிர்வாதம் பண்ண..கொடுத்த அட்சதையெல்லாம் பொறுக்கி..ரிஷப்ஷன்ல லெமன் ரைஸ் ஆக்கிட்டான். | ||||
என்னங்க மாப்பிள்ளை, உடம்புபூரா ஒரே தழும்பா இருக்கு? நான் அப்பவே சொல்லல.. மாப்பிள்ளை வாழ்க்கையில் ரொம்பவும் அடிபட்டவர்னு. | ||||
பெண் பார்த்து வந்த பின் அவன் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கிறான். துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்று யாரோ சொன்னாங்களாம். | ||||
சோப்பு கடைக்காரன் பாண்ணை கட்டிகிட்டது தப்பா போச்சா ஏன்? வெட்டு ஒண்ணு துண்டு இரண்டா பேசுறா. | ||||
புதுசா..வெட் கிரைண்டர்,வாஷிங் மெஷின்..எல்லாம் வாங்கி இருக்கேன் அடிப்பாவி..உன் கல்யாணத்திற்கு எனக்கு இன்விடேஷன் கொடுக்கலையே |
டேய் நாளைக்கு பெண் பார்க்க போறேன். கண்டிப்பா நீ வரனும்? ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா. | ||||
மாப்பிள்ளை பையன் நடத்தை எப்படி? அதென்ன அப்படி கேட்டு விட்டீர்கள்? ஜெயிலில் இருந்த போது வார்டனிடம் வாங்கின நன்னடத்தை சர்டிபிகேட்டைக் காட்டச் சொல்லவா? | ||||
உங்க கல்யாணத்திற்கு வரமுடியல...சாரி.. அதனால பரவாயில்லை...இப்பக்கூட நீங்க் மொய் எழுதலாம். | ||||
எனக்கு துன்பம் வந்தப்போ என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் என் கூடவே இருந்தாங்க உனக்கு என்னிக்கு துன்பம் வந்தது கல்யாணமாச்சே எனக்கு மறந்துட்டியா? | ||||
பேசாம என் மாமா பொண்ணையே கட்டிக் கலாம்னு தோணுது! பேசாம இருக்க யாரை கட்டினா என்ன? | ||||
இவருக்கு நான் பொண்ணுதர்றேன். நீ பொண்ணு தர்றேன்னு பயங்கர போட்டி அப்படி என்ன வேலை செய்றாரு? தண்ணீர் லாரி வச்சிருக்காரு. | ||||
பேங்க்லே கடன் வாங்கி பைக் வாங்கினேன் இல்லையா? கடனைக் கட்ட முடியாததால பைக்கைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க ஓ!! இப்படினு தெரிஞ்சிருந்தா பேங்க்லே கடன் வாங்கி கல்யாணம் பண்ணிருந்திருப்பேனே!! | ||||
பெண்ணின் தந்தை- என் பொண்ணு..தமிழும்..ஆங்கிலமும் கலந்து நுனி நாக்குல பேசுவா நன்பர்-சுருக்கமா...தமிழ் டி.வி.சானல்ல காம்பியரிங்க் பண்றான்னு சொன்னா போதுமே.. | ||||
மாமனாரிடம் டூ வீலர் கேட்டது தப்பா போச்சு? ஏன் என்னாச்சி? மாட்டு வண்டி வாங்கிகொடுத்துட்டார் | ||||
கல்யாண வீட்ல, ரொம்பநேரமா செருப்புகளை உத்து உத்து பார்க்கறீங்கேள, உங்க செருப்பை கானோமோ? ம்ஹும், நல்ல டிசைன் செருப்பா தேடிக் கிட்டிருக்கிறேன். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக