நினைவெல்லாம் நீ..!
மறக்க
தொடரும் நினைவுகளுடன்
மணிவண்ணன்
முயலும் போதுதான்
உயிர்ப்பிக்கின்றன
உன் நினைவுகள்...
புதைக்க நினக்கும் போதுதான்
கீறித்துளிர்க்கின்றன
உந்தன் ஞாபகங்கள்...
அழிக்க
எண்ணும் போதுதான்
கண்முன் தெரிகின்றன
உந்தன் பிம்பங்கள்...
என்ன செய்ய
உன்னை நினைத்து விட்ட
குற்றத்திற்காக நான்
செத்து விடவா முடியும்?
இன்றுவரை கூட
மறந்து விடத் தோன்றவில்லை
நேற்றின் பிரதிபலிப்பால்
மனசின் வேதனை எளிதில் ஆறாது...
முகம் மறக்கும் முன்பே
முகவரியை தொலைத்து நிற்கிறது
என் வாழ்க்கை...
நீர்ச்சுழலில் சிக்கிய சருகாய்
நிறைவேறாத ஆசைகளின் அலையிலே
சுழலுகின்ற மனசு
மீண்டும் வருமென்ற நம்பிக்கை
சிறிதும் எனக்கில்லை....
வாழவேண்டும் என்ற
நிர்ப்பந்தத்தால்
எத்தனை வேதனைகளைத்தான்
விருதுகளாய் பெறுவது
காலம் கேள்வி கேட்க
பதில் சொல்ல மறுக்கிறது மனது...
இனியவளே!
புரட்டியது புத்தகத்தை
என்றாலும் அதில்
புதைந்திருப்பது
உன் புகைப்படம்...
வாழ்க்கையின்
முதல் படியேறி
வழுக்கி விழுந்தவன் நான்
எனக்கு வழிகாட்டியாய்
வந்தவள் நீ...
காவிய பெண்ணே
நடந்து பார்க்கலாம்
வாழ்க்கையை நோக்கி
நமக்கு
வழி தெரியும் வரை...
வாழ்க்கை பாதையில்
நான் பயணித்த போது
வழுக்கி விழுந்தது
பள்ளம் அல்ல
அது உன் உள்ளம்...
தொடரும் நினைவுகளுடன்
மணிவண்ணன்
தவிக்கும் இதயம்..!
நான் அழுகிறேன் இன்று
உன் நினைவுகளினால்..
இதனால் உறக்கம் எனக்கு
பிரிவு கடிதம் அனுப்பி இருந்தது..
எந்நேரம் அவனின் நினைவுகள்
எனக்கு அழைப்பிதழ் கொடுத்தது..
உனக்காக பிறந்தவள் நான்
என்று நினைக்கும் போது இனித்தது..!
சோதனையும் வேதனையும்
சேர்ந்ததா காதல்..?
என் கேள்விக்கு அவனின்
பதில் கண்ணீர்..
ஆனால் நீ என்னை உயிருக்கு
உயிரை நேசிக்கிறாய் என்று
நான் அறிவேன்..!
உன் கண்களில் இருந்து பாய்ந்த
உன் பாசக் கதிர்களினால் பாதிக்கபட்டது
என் இதயமாட..புரிந்துக் கொள்..!
தவிக்கும் என் இதயத்தை..!
தொடரும் நினைவுகளுடன்,; மணிவண்ணன்
உன் பார்வை..!
உன்னை கண்ணும் வரையில்
என் பிறப்பின் ஆழத்தை நான்
உணரவில்லை..அறியவில்லை..
உன்னை கண்ட பின்
வாழ்வில் முழுமையை
அடைந்தேன்..
ஏதோ ஒரு பார்வையில்
உன்னதை என்னை நான்
காண்கிறேன்..
உன் கண்கள் காணும்
பார்வையில் நானாக
நானில்லை அன்பே..!
தனிமை என்னை கொல்லும்
நேரம் இனிமையை இனித்தது..!
என் உயிரில் பாதி,
உன் உணர்வில் கலந்தது..!
உன் உணர்வில் பாதி,
என் நினைவில் கலந்தது..!
சில நாட்களுக்கு
பிறகு கண் விழித்து பார்த்தேன்.
கனவுகள் யாவும் கலைந்தது..
கனவில் மிஞ்சியது
கண்ணீர் மட்டுமே !
தொடரும் நினைவுகளுடன், மணிவண்ணன்
என் உயிர் காதலே
துடிக்காத என் இதயத்தை
துடிக்க வைத்தவனே..
உயிரில்லா என் உடலுக்கு
காதல் உயிர் கொடுத்தவனே..
உன் மீது கொண்ட
காதலை ஜென்மத்திற்கும்
அழிக்க முடியாது..
காத்திருக்கும் ஒவ்வொரு
நிமிடங்களையும் சுகமாய்
உணர்கிறேன்..உனக்காக
காத்திருப்பதால்..!
இமைகளை முடினால்,
கனவில் உன் முகம்..
என் இதயம் கொண்ட
காதலுக்கு கண்ணீர் மட்டும்
துணை..!
ரோஜா மலரை பறிக்கையில்
கைகளில் முட்கள் குத்தியது..
என் கைகளில் இருக்கும் ரோஜா
மலர்தான் தெரிந்தது..
உனக்கும் என் மனதில் இருக்கும்
வேதனை புரியவில்லை..
காத்திருப்பேன்
என் உயிர் காதலே..!
தொடரும் நினைவுகளுடன், மணிவண்ணன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக